மாணவர்களுக்கு வழங்கிய வேலை வாய்ப்பை திரும்பப் பெறாதீர்கள் – ஐ.ஐ.டி குழுமம் வேண்டுகோள்
கொரோனா வைரஸ் பாதிப்பைக் காரணம் காட்டி தங்களது மாணவர்களுக்கு வழங்கிய வேலை வாய்ப்பை நிறுவனங்கள் மீண்டும் பெறக் கூடாது என அனைத்து ஐ.ஐ.டி.வேலை வாய்ப்பு குழுமம் கோரிக்கை வைத்துள்ளது. டெல்லி, கான்பூர், சென்னை உள்ளிட்ட இடங்களில் அமைந்துள்ள ஐ.ஐ.டி பல்கலைகழங்களில் ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இங்குப் படித்து வந்த 4000 மாணவர்களுக்கு, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் செயல்பட்டு வரும் நிறுவனங்கள் வேலை வாய்ப்பை வழங்கியிருந்தது. கொரோனா பாதிப்பால் அமெரிக்காவில் பொருளாதாரம் கடுமையாகச் சரிவடைந்த நிலையில், அமெரிக்க நிறுவனங்களில் தேர்வான ஐ.ஐ.டி குழுமத்தின் 11 மாணவர்களின் வேலை வாய்ப்பானது திரும்பப்பெறப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பல நிறுவனங்களும்…