கிரிக்கெட் கமென்ட்ரி; விடாது துரத்தும் ட்ரோன்: கேரள போலீசார் வெளியிட்ட கலகல வீடியோ!
கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கொரோனாவைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனாலும் பலர் தேவையில்லாமல் வெளியில் நடமாடுகின்றனர். இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தில் வலம் வருகிறார்கள். கிராமப்பகுதிகளில் இளைஞர்கள், சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடுவது போன்ற செயல்களிலும் ஈடுபடுகின்றனர். அனைவரையும் காவல்துறை கண்காணிக்க முடியாது என்பதால் மக்கள் தாங்களாகவே சுயக் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டுமென்று காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்….