வரும் ஆண்டுகளில் புயல்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் – எச்சரிக்கும் வல்லுநர்கள்
வங்கக் கடலில் புதிய புயல் உருவாக இருக்கும் நிலையில் வரும் ஆண்டுகளில் புயல்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறுகிறார்கள் வல்லுநர்கள். பூமியின் நிலநடுக்கோட்டுப் பகுதியில் வெப்பத்தால் கடல் நீர் சூடாகிறது. இதனால் கடலின் மேற்பரப்பில் பெரும்பாலான காற்று மேலெழும்பி விடுவதால் அந்த வளிமண்டல பகுதியில் குறைந்த காற்றழுத்தம் ஏற்படுகிறது. இந்தக் குறைந்த காற்றழுத்தத்தை நிரப்ப சுற்றுவட்ட காற்று சுழன்று விரைகிறது. பின்னர் மேலே உறைந்த மேகமும் காற்றோடு சேர்ந்து சுழல்கிறது. இப்படித் தொடர்ந்து, ஏற்படும் நீராவிப்போக்கால் அந்தப்…