`ஆம்பள அழலாமா?’ என்று கேட்கும் ஆணாதிக்க மனநிலையை என்று விடுவீர்கள் ஜெயக்குமார்?!| #VoiceOfAval
ஆதி பொதுவுடைமை சமூகத்தில் மனிதர்கள் பல இனக்குழுக்களாக வாழ்ந்து வந்தனர். அன்றைய காலத்தில் ஆண் பெண், என்ற பாலின பாகுபாடின்றி மனிதர்கள் தினசரி தேவைக்குப் பின்னால் ஓடிக்கொண்டிருந்தனர். ஆதி பொதுவுடைமை சமூகம் தாய்வழிச் சமூகமாக இருந்தது. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக இந்தச் சமூகத்தின் வடிவம் மாறி, தந்தை வழிச் சமூகமாக உருவெடுத்தது. இதற்குப் பின்தான் பெண்கள் மீதான ஒடுக்குமுறையும், வன்முறைகளும் அதிகரிக்கத் தொடங்கியது. பெண் என்றால் அடக்கமாக இருக்க வேண்டும். சாந்தம், பொறுமை, தியாகம் போன்றவை பெண்ணின் குணங்கள். வீரம், வலிமை போன்றவை ஆணின் குணங்கள் என வகுக்கப்பட்டன. ஆனால்…