’’அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறுகிறேன்”- சுரேஷ் ரெய்னா அறிவிப்பு
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் சுரேஷ் ரெய்னா. பிசிசிஐ, உ.பி. கிரிக்கெட் சங்கம், சிஎஸ்கே நிர்வாகங்களுக்கு நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார் ரெய்னா. அனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக ரெய்னா அறிவித்துள்ளார். தனது ஓய்வு குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் ரெய்னா, “என்னுடைய நாட்டையும், மாநிலத்தையும் முன்னிறுத்தும் பிரதிநிதியாக நான் இருந்தது, மிக மிக பெருமைமிக்க மரியாதைக்குரிய தருணமாக எனக்கு இருந்திருக்கிறது. இந்த நேரத்தில், அனைத்துவகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் நான் எனது ஓய்வை அறிவிக்க விரும்புகிறேன்….