‘இரக்கமில்லையா உனக்கு? நாய் கடித்ததில் வலியால் துடித்த சிறுவன்:வேடிக்கை பார்த்த உரிமையாளர்
உத்தரப்பிரதேசத்தில் லிஃப்டில் நின்றுக்கொண்டிருந்த சிறுவனை தனது வளர்ப்பு நாய் கடித்தும் கண்டுக்கொள்ளாமல் அந்நாயின் உரிமையாளர் வேடிக்கைப் பார்த்த சம்பவத்தின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் ராஜ்நகர் எக்ஸ்டென்ஷன் பகுதியில் உள்ளது சார்ம்ஸ் கேஸ்டில் ஹவுசிங் சொசைட்டி. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று முன்தினம் மாலை சுமார் 6 மணியளவில், லிஃப்டில் சிறுவன் ஒருவன் புத்தகைப் பையுடன் நின்றுக் கொண்டிருந்த நிலையில், அந்த லிஃப்டில் வளர்ப்பு நாய் ஒன்றுடன் பெண் ஒருவர் வந்துள்ளார். மேலும்…