‘ரூ.85 லட்சம் வரை கிடைக்கும்’- இழப்பீட்டு தொகை அறிவிப்பால் ஃபோர்டு ஊழியர்கள் அதிருப்தி
சென்னை மறைமலைநகர் ஃபோர்டு தொழிற்சாலை கார் உற்பத்தியை நிறுத்தியுள்ள நிலையில், ஊழியர்களுக்கான இழப்பீட்டு தொகையை ஃபோர்டு நிர்வாகம் அறிவித்துள்ளது. நிர்வாகம் அறிவித்துள்ள இழப்பீட்டுத் தொகை போதுமானதாக இல்லை எனக்கூறி நிரந்தர தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். சென்னை அடுத்த மறைமலை நகரில் ஃபோர்டு தொழிற்சாலை சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்தது. இந்த ஆலைகளில் வருடத்திற்கு 4 லட்சம் கார்கள் உற்பத்தி செய்யமுடியும் என்ற நிலையில், கடந்த சில ஆண்டுகளாக 80 ஆயிரம் கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டு வந்தன. இதனால் ஃபோர்டு…