கொரோனா கால மகத்துவர்: `பசி எடுத்தால் எடுத்து சாப்பிடவும்’ – பசியாற்றும் பழக்கடைக்காரர்
கோவில்பட்டியில் `பசி எடுத்தால் எடுத்து சாப்பிடவும்’ என எழுதிவைத்டுவிட்டு கடையில் வாழைப்பழ தார்களை தொங்க விட்டு பழக்கடைக்காரர் ஒருவர் பசியாற்றி வருகிறார். கொரோனா வைரஸ் பரவல் உச்சத்தில் இருப்பதால் அதை கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்கை அறிவித்துள்ளது. அதன்படி கடந்த இரண்டு வாரமாக தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. ஊரடங்கு காரணமாக, எத்தனையோ பேர் வேலை இன்றியும், வருமானம் இல்லாமலும் தவித்து வருகிறார்கள். சிறிய அளவிலான கடைகள் வைத்து வியாபாரம் செய்து வந்தவர்கள், சாலையோர வியாபாரிகள்…