சரஸ்வதி பூஜை: வீட்டில் வழிபாடு செய்வது எப்படி? உகந்த நேரம் என்ன?
அம்பிகையைக் கொண்டாடும் நாள்கள் நவராத்திரி. நவம் என்றால் ஒன்பது. நவம் என்றால் புதுமை. எனவே புதுமையான முறையில் அம்பிகையை வழிபட்டு அருள்பெற உகந்த நாள்கள் நவராத்திரி. முதல் மூன்று நாள்கள் அம்பிகையை துர்கையாகவும் அடுத்த மூன்று நாள்கள் லட்சுமியாகவும் கடைசி மூன்று நாள்கள் சரஸ்வதியாகவும் அம்பிகையைக் கொண்டாடுவது வழக்கம். குறிப்பாக நவராத்திரியின் 9 ம் நாளை சரஸ்வதி பூஜையாகக் கொண்டாடுகிறோம். சரஸ்வதி தேவி கல்வி, கலை மற்றும் ஞானத்தின் அதிபதியாகத் திகழ்பவள். வாக்தேவி மூன்று காலங்களில் காயத்ரி,…