“தாழக்கிடப்பாரைத் தற்காப்பதுவே தர்மம்” – அய்யா வைகுண்டரின் 191-வது அவதார தினவிழா!
கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் அய்யா வைகுண்டரை வழிபடும் பதிகள் (வழிபாட்டுத் தலங்கள்) அமைந்துள்ளன. கன்னியாகுமரி அருகே உள்ள சாமித்தோப்பில் அய்யா வைகுண்டர் தலைமைப்பதி அமைந்துள்ளது. மார்ச் 4-ம் தேதியான இன்று அய்யா வைகுண்டர் அவதார தினமாகும். அய்யா வைகுண்டரைப் பின்பற்றும் அய்யா வழி மக்கள் தங்கள் கிராமங்களில் உள்ள பதிகளில் இருந்து கால்நடையாக அன்புக் கொடி ஏந்திச்சென்று சாமிதோப்பு தலைமைப்பதியில் சமர்ப்பித்து வழிபட்டனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அய்யாவழி பக்தர்கள் நேற்றே புறப்பட்டு நாகர்கோவில்…