இடுகாட்டிலும் மணல் எடுக்கும் அவலம்… கூவத்தின் நிலைமைக்கு இதுதான் காரணம்! #SpotVisit
திருவள்ளூர் மாவட்டத்தின் முதன்மை நீர் நிலை ஆதாரமாக ஒரு காலத்தில் விளங்கிய கூவம் ஆறு, இன்று மணல் கொள்ளையர்களின் பிடியில் சிக்கி அவல நிலைக்குள்ளாகியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் கேசாவரம் அணைக்கட்டு பகுதியில் இருந்து தொடங்கும் கூவம் ஆறு பேரம்பாக்கம், பிஞ்சிவாக்கம், அதிக்கத்துர், மணவாள நகர் வழியே பயணித்து ஆவடி, பருத்திப்பட்டு, திருவேற்காடு வழியே சென்று சென்னையின் பல பகுதிகளைக் கடந்து கடலில் கலக்கிறது. கூவம் ஆறு சென்னை மக்களின் பார்வைக்கு சாக்கடை ஓடையாகத் தெரியும் கூவம்…