“எங்களுக்கான பணிநேரத்தை அரசு முழுமையா ஒழுங்குபடுத்தணும்”- உரிமைகோரும் பெண் போலீஸ்
இந்தியாவில் சவால்கள் இல்லாத துறையென்றோ, பணியிடமென்றோ எதுவுமில்லை. ஆனால் அந்த சவால், பணியை சார்ந்து மட்டுமன்றி, பாலினம் சார்ந்தும் அமையும்போதுதான் அது கேள்விக்குரிய விஷயமாகிறது. அப்படி பாலினம் சார்ந்து ஏற்படும் கூடுதல் சவால்களால் போராடும் பெண்கள் அதிகம் இருக்கும் முக்கியமான துறை, காவல்துறை. இக்காரணத்தால், இந்த பெண்கள் தினத்தில், பெண் காவலர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து கேட்டறிய முயற்சித்தோம். காவல்துறையில் பணியாற்றும் பெண்களுக்கு ஏற்படும் மிக முக்கிய பிரச்னைகள் குறித்து பெயர் வெளியாட விரும்பாத ஆயுதப்படை போலீஸ் கான்ஸ்டபிள்…