சின்னத்திரை நடிகர்களை வீடுபுகுந்து தாக்கியதாக சூர்யாதேவி மீது புகார்
வளசரவாக்கத்தில் சின்னத்திரை நடிகர்களை சூர்யா தேவி வீடு புகுந்து தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடக்கும் காமெடி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் நடித்து பிரபலமானவர் நாஞ்சில் விஜயன். இவர் நேற்று இரவு வளசரவாக்கம், வீரப்பா நகரில் சின்னத்திரை நடிகை சீபாவுடன் சேர்ந்து யூ டியூப் நிகழ்ச்சிக்காக படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது அடியாட்களுடன் வீட்டிற்குள் நுழைந்த சூர்யா தேவி அங்கு இருந்தவர்களை சரமாரியாக தாக்கி விட்டு சென்றுவிட்டதாகவும், இதில் நாஞ்சில் விஜயன் மற்றும் உடன்…