டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் : மரம் மீது மோதியதில் 4 பேர் உயிரிழப்பு
ஒட்டன்சத்திரத்திலிருந்து உடுமலை நோக்கி சென்றபோது கார் விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்திலிருந்து உடுமலை நோக்கி கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அந்தக் கார் கரடிக்குப்பம் பகுதியில் செல்லும்போது டயர் வெடித்து தறி கெட்டு ஓடியது. இதனால் கார் மரத்தின்மீது மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM