தெலங்கானாவில் ‘குஸ்ஸாடி’ நடனமாடிய தமிழிசை சவுந்தரராஜன் (வீடியோ)
தெலங்கானாவில் நடைபெற்ற விழா ஒன்றில், பத்மஸ்ரீ விருது பெற உள்ள கலைஞருடன் அம்மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் குஸ்ஸாடி என்ற பாரம்பரிய நடனமாடினார். தெலங்கானாவின் அடிலாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியினத்தவரான கனகராஜூ என்பவர், குஸ்ஸாடி என்ற நடனக்கலைஞர் ஆவார். 70 வயதான இந்தக் கலைஞரின், நடனத் திறமையைப் போற்றும் விதமாக, மத்திய அரசு பத்மஸ்ரீ விருதை அறிவித்துள்ளது. கனகராஜூவுக்கு ஐதராபாத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் மூத்த கலைஞரை கௌரவித்த அம்மாநில ஆளுநர்…