`அவரை ஆறு மாசத்துல தமிழ் பேச வெச்சிடுவோம்!’ – துருக்கி இளைஞரை காதல் திருமணம் செய்த கரூர் பெண்!
கரூரைச் சேர்ந்த பி.டெக் பட்டதாரிப் பெண் பிரியங்கா, துருக்கியைச் சேர்ந்த தன் காதலரை, இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். கரூரில் உள்ள பசுபதிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிரியங்கா. பி.டெக் படித்துள்ள இவர், தற்போது டெல்லியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். டெல்லியில், ஒன்றரை வருடங்களுக்கு முன்பு அஹமத் ஜெமில் கயான் என்பவருடன், பிரியங்காவுக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. துருக்கி நாட்டைச் சேர்ந்த இவர், டெல்லி மற்றும் துருக்கியில் தொழில் செய்து வருகின்றார். பிரியங்கா – அஹமத் ஜெமில்…