திருமணம் மீறிய உறவு; வெளிநாட்டிலிருந்து திரும்பிய கணவன் – இடையூறாக இருந்ததால் கொன்ற மனைவி, நண்பர்கள்
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் பகுதியை சேர்ந்தவர் பிச்சைக்கனி (43). இவரின் மனைவி சாந்தி (36). இவர்களுக்கு ஒரு மகன்,இரண்டு மகள்கள் உள்ளனர். பிச்சைக்கனி வெளிநாட்டில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக சொந்த ஊருக்கு திரும்பி வந்த நிலையில், உள்ளூரில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் கடந்த மே மாதம் 28-ம் தேதி வேலைக்கு செல்வதாக வீட்டில் இருந்து புறப்பட்ட பிச்சைக்கனி மீண்டும் வீடு திரும்பவில்லை….