இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட 2 தமிழக மீனவர்களையும் உடனே மீட்டுத்தர வேண்டும்! மீனவர்கள் கோரிக்கை
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்திலிருந்து கடந்த 18-ம் தேதி சுரேஷ்குமார் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் சுகந்தன், சேவியர், ராஜ்கிரண் என்ற மூன்று மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். 17 நாட்டிக்கல் மைல் தொலைவில் கடந்த 19-ம் தேதி மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லைத் தாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி, அத்துமீறி தங்களது ரோந்துக் கப்பல் மூலம் மீனவர்களின் படகினை இடித்திருக்கின்றனர். அப்போது படகு பழுதாகி நடுக்கடலில் மூழ்கியது. இதில், நீண்ட நேரமாகக்…