“கீரவாணியை முதன்முதலில் இப்படித்தான் பார்த்தேன்…” – மலையாள நடிகர் வினித் சீனிவாசன் நெகிழ்ச்சி
ராஜமெளலியின் `ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படத்தில் இடம்பெற்ற `நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கர் விருதுக்கு அடுத்து திரைத்துறையினருக்குக் கொடுக்கப்படும் உயரிய விருதாகக் கருதப்படும் ‘கோல்டன் குளோப்’ விருதினை வென்றது. ரசிகர்கள் மற்றும் திரைத்துரையினர் எனப் பலரும் படக்குழுவினருக்கும், இப்பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் மரகதமணிக்கும் (கீரவாணி) தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல மலையாள நடிகர் மற்றும் இயக்குநரான வினித் சீனிவாசன், இசையமைப்பாளர் மரகதமணியை முதன்முதலில் சந்தித்த தருணம் பற்றி நெகிழ்ச்சியாகப் பகிர்ந்து கொண்டுள்ளார். வினித் சீனிவாசனின் பதிவு இது…