இந்த மாதம் EMI கட்டணுமா… மக்களின் சந்தேகமும்… வங்கி அதிகாரிகளின் விளக்கமும்!
கொரோனாவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக மக்கள் வேலைகளுக்குச் செல்ல முடியாமல் வீட்டிற்குள் முடங்கி இருப்பதால், நிதி நெருக்கடிக்கு ஆளாகியிருக்கிறார்கள். மேலும் இந்த ஊரடங்கால் நாட்டில் பல கோடி பேர், தங்கள் வேலைகளைத் தற்காலிகமாக இழந்து வருமானமின்றித் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று மத்திய ரிசர்வ் வங்கி, அடுத்த மூன்று மாதங்களுக்கு மக்கள் வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்களிடம் வாங்கியிருக்கும் கடனுக்கான தவணையைச் செலுத்தாமல், மூன்று மாத காலம்…