தன்னை காண வந்த ரசிகர்கள் மீது நடத்தப்பட்ட தடியடி – வருத்தம் தெரிவித்த விக்ரம்!
திருச்சி விமான நிலையத்தில் நடிகர் விக்ரமை காண வந்த ரசிகர்களுக்கும், மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதை அடுத்து தடியடி நடத்தப்பட்ட நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் விக்ரம் வருத்தம் தெரிவித்துள்ளார். தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காகவும், ‘கோப்ரா’ பட புரமோஷனுக்காகவும், இன்றுகாலை திருச்சி வந்த நடிகர் விக்ரமை வரவேற்க விமான நிலையத்தில் ஏராளமான ரசிகர்கள் கூடியிருந்தனர். நடிகர் விக்ரம் திருச்சி விமான நிலையத்தை விட்டு வெளியே வரும் பொழுது, பயணிகள் உள்ளே செல்லக்கூடிய…