‘டைரி’ விமர்சனம்; முதலில் பொறுமையை சோதிக்கும்.. க்ளைமேக்ஸில் ட்விஸ்ட் & டர்ன்ஸ் நிச்சயம்!
ஒரு பேருந்துப் பயணத்தின்போது நடக்கும் மர்மங்களும், அதன் மூலம் வெளிப்படும் உண்மைகளுமே `டைரி’ படத்தின் ஒன்லைன். மேட்டுப்பாளையத்திலிருந்து உதகை செல்லும் 13-வது கொண்டை ஊசி வளைவில் தொடர்ந்து விபத்துகள் நிகழ்கிறது. இன்னொரு பக்கம் 16 வருடங்களுக்கு முன் உதகையில் நிகழ்ந்த கொள்ளை மற்றும் கொலை சம்பவத்தை விசாரிக்க உதகை வருகிறார் ட்ரெய்னிங் எஸ்.ஐ. வரதன் (அருள்நிதி). இந்த இரண்டு பிரச்சனைகளுக்கு நடுவே, ஒர் இரவில் உதகையில் இருந்து கோயம்புத்தூருக்கு சில பயணிகளுடன் கிளம்புகிறது ஒரு பேருந்து. இந்த…