வெம்பக்கோட்டையில் முதல்கட்ட அகழாய்வு பணி தொடக்கம்… இந்த இடத்தின் சிறப்புகள் என்னென்ன?
தமிழகத்தில் கீழடி, சிவகளை, மயிலாடும்பாறை, கங்கைகொண்ட சோழபுரம் விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை, திருநெல்வேலி மாவட்டம் துலுக்கர்பட்டி உள்ளிட்ட 7 இடங்களில் இந்த ஆண்டில் புதிதாக அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்படும் என அண்மையில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்த அறிவிப்பை வரலாற்று ஆய்வாளர்கள் பெரிதும் வரவேற்றனர். வெம்பக்கோட்டையில் நுண்கற்கருவிகள், சங்ககால மண்பாண்ட ஓடுகள், பெருங்கற்கால பண்பாட்டு எச்சங்கள் மற்றும் செப்பேடுகள் போன்றவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. வைப்பாற்றின் வடக்கு கரையோரத்தில் அமைந்த இக்கிராமத்தில் 35 ஆண்டுகளுக்கு…