சிங்கம், புலிக்கு 400 கிலோ இறைச்சி, முதலைக்கு ஏரி மீன்கள், தினமும் குளியல்…வண்டலூர் பூங்கா நிலவரம்
உலக மக்கள் அனைவரையும் அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ், முதலில் சீனாவில் பிராணிகளிடமிருந்துதான் மனிதர்களுக்குப் பரவியதாகக் கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் விலங்குகளையும் விட்டுவைக்கவில்லை. கடந்த ஏப்ரல் 2-ம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரிலுள்ள பிராங்ஸ் மிருகக்காட்சி சாலையில் பராமரிக்கப்படும் நடியா (Nadia) என்ற நான்கு வயது மலேசியப் பெண் புலிக்கும் கொரோனா தொற்று இருந்தது உறுதிசெய்யப்பட்டது. இதை அந்நாட்டின் அயோவா நகரிலுள்ள தேசிய கால்நடைகள் சேவை ஆய்வுக்கூடம் உறுதிசெய்துள்ளது. புலி கொரோனா பாதித்த முதல் வனவிலங்கு இதுதான். அந்த…