`திடீரென வெடித்த எண்ணெய்க் கிணறு; பற்றியெரியும் தீ!’- வீரர்கள் 2 பேர் உயிரிழப்பால் பதறும் அஸ்ஸாம்
அஸ்ஸாம் மாநிலம், டின்சுகியா எனும் பகுதியில் உள்ள ஆயில் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான எண்ணெய்க் கிணற்றில் கடந்த சில நாள்களாக அதிகளவில் கசிவு இருந்துள்ளது. இதைச் சரிசெய்யும் பணிகளும் அங்கு நடைபெற்று வந்துள்ளன. இந்த நிலையில், எண்ணெய்க் கிணற்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயினால் எழுந்த கரும்புகையை 10 கி.மீ தூரத்துக்கும் அப்பால் இருந்து பார்க்க முடிந்ததாகக் கூறுகின்றனர். எண்ணெய்க் கிணற்றைச் சுற்றி சுமார் 1.5 கி.மீ பரப்பில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், விபத்து ஏற்பட்ட…