கட்டுப்பாட்டை இழந்து வயலில் இறங்கிய தனியார் பள்ளி வேன் – காயமடைந்த குழந்தைகள்
தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து 8 பள்ளி குழந்தைகள் காயமடைந்த நிலையில், ஆறு குழந்தைகள் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள குறிச்சி கிராமத்தில் IBEA என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்நிலையில் இன்று திங்கட்கிழமை என்பதால் பள்ளிக்கு பல்வேறு பகுதிகளிலிருந்து குழந்தைகளை அழைத்துக் கொண்டு பள்ளி வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது அதம்பை கிராமத்திலிருந்து பள்ளி குழந்தைகளை ஏற்றிக் கொண்டு வந்துபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த…