‘இப்படியெல்லாமா வதந்திகளை பரப்புவீர்கள்’ கொரோனா வதந்திகளும்.. உண்மைகளும்
கொரோனா குறித்து சமூகவலைத்தளங்களில் வதந்திகள் பரப்பப்பட்டு வரும் நிலையில் அவற்றின் உண்மைத் தன்மை கீழே விளக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு இன்று உலகம் முழுவதும் மாபெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியாவில் இது வரை 147 நபர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மேலும் கொரோனா பரவாமல் இருக்க மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. குறிப்பாக தொலைத்தொடர்பு சாதனங்களின் மூலமாகவும், சமூகவலைத்தளங்கள் மூலமாகவும் கொரோனா குறித்த விழிப்புணர்வு குறித்த…