‘முழுவீச்சில் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் பணி’ – மத்திய சுகாதாரத்துறை
கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் குறித்து பல்வேறு விழிப்புணர்வு தகவல்கள் மத்திய சுகாதாரத்துறை தரப்பிலிருந்து வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தகவல்கள் அளித்துள்ள மத்திய சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர், மனிதர்களிடையே கொரோனா மருந்தை பரிசோதிக்கும் அளவிற்கு ஆய்வு முன்னேற்றமடையவில்லை என்று கூறியுள்ளார். தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் (Hydroxychloroquine) மாத்திரைகள் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பெருமளவு உதவுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் கொரோனா…