மாட்டுப்பொங்கல் ஸ்பெஷல்: பட்டத்துக் காளையை வணங்கி மகிழ்ந்த பொதுமக்கள்! எங்கே தெரியுமா?
மாட்டுப் பொங்கலை முன்னிட்டு கம்பம் தம்பிரான் மாட்டுத் தொழுவத்தில் உள்ள பட்டத்துக் காளையை பொதுமக்கள் வணங்கி வழிபாடு நடத்தினர். தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீநந்தகோபால சுவாமி தம்பிரான் மாட்டுத் தொழுவத்தை அப்பகுதி மக்கள் கோயிலாக வழிபட்டு வருகின்றனர். இங்கு மூலவர் என்று தனி சன்னிதானம் ஏதும் கிடையாது. தொழுவத்தில் வளர்க்கப்படும் காளைகளில் ஒன்றை பட்டத்துக் காளையாக தேர்ந்தெடுத்து அதற்கு பூஜை செய்து வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. இத்தகைய பிரசித்தி பெற்ற இந்த தொழுவத்தில் ஒவ்வொரு…