மண்ணை குளிர்வித்த கோடை மழை! “அடுத்த இரண்டு மூன்று வாரங்களில்..” – பிரதீப் ஜான் சொல்வதென்ன?
வானிலை ஆய்வாளர் கணிப்பின்படி, நேற்று இரவே சென்னையில் கோடை மழை பெய்துள்ளது. இந்தியாவில் வெப்ப அலை வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், “தமிழகத்தில் மேற்கு உள்மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கலாம்” என்று தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். இருப்பினும் கோடை மழை குறித்த கணிப்பும் வெளியாகியுள்ளது. கடந்த 13-ஆம் தேதி, தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோட்டில் 99 டிகிரி ஃபாரன்ஹீட்டும், சேலத்தில் 99 டிகிரி ஃபாரன்ஹீட்டும் வெயில் பதிவானது. 14- ஆம் தேதி, ஈரோடு…