சுபஸ்ரீ பலியான அதே சாலையில் கிழிந்து தொங்கும் ராட்சத ப்ளக்ஸ் பேனர்! விபத்து தடுக்கப்படுமா?
சென்னையின் ரேடியல் சாலையில் கிழிந்து தொங்கும் இராட்சத விளம்பர பேனரை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சென்னை பள்ளிகரணை அடுத்த கீழ்கட்டளை ஏரிக்கு அருகில் ரேடியல் சாலையில் சட்டவிரோதமாக இராட்சத விளம்பர பேனர் வைக்கப்பட்டுள்ளது. சுமார் 10 டன் எடை கொண்ட இரும்பின் மேல் பகுதியில் அனுமதியின்றி நீதிமன்ற உத்தரவை மீறி விளம்பரம் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அந்த விளம்பர பேனர் கிழிந்து தொங்கிக் கொண்டிருக்கிறது. இதனை காவல் துறையினரும், ஊராட்சி நிர்வாகமும் கண்டு கொள்ளாமல்…