Tamilnadu

திருத்தணி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் யோகிபாபு

புத்தாண்டையொட்டி திருத்தணி முருகன் கோவிலில் நடிகர் யோகிபாபு சாமி தரிசனம் செய்தார். திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோவிலில் திருப்படி திருவிழா மற்றும் புத்தாண்டையொட்டி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் நடிகர் யோகிபாபு முருகரை தரிசனம் செய்வதற்காக திருத்தணி முருகன் கோவிலுக்கு வந்தார். அங்கே விஐபிகள் செல்லும் பாதையில் செல்வதற்காக சுமார் ஒருமணி நேரம்…

Read More
Tamilnadu

ஆண்டின் முதல் சூரிய உதயத்தை காண கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

2023 ஆம் ஆண்டின் முதல் சூரிய உதயத்தை காண ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் கன்னியாகுமரி கடற்கரையில் குவிந்தனர். உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்களில் களைகட்டியுள்ள நிலையில், சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் உள்ள விடுதிகளில்; கலை நிகழ்ச்சிகளுடன் அறுசுவை உணவு பரிமாறப்பட்டது. இதைத் தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு சுற்றுலா பயணிகள் கேக் வெட்டி புத்தாண்டை வரவேற்றனர். அப்போது ஆடிப்பாடி ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். இந்நிலையில் இந்த ஆண்டின் முதல் சூரிய உதயத்தை காண்பதற்காக முக்கடல் சங்கமிக்கும்…

Read More
Tamilnadu

எந்த நாட்டில் இருந்தாலும் சொந்த கிராமத்தில் புத்தாண்டு கொண்டாடி மகிழும் தொழிலதிபர்

பத்திற்கும் மேற்பட்ட நாடுகளில் தொழில்செய்து வரும் பெரம்பலூரைச் சேர்ந்த தொழிலதிபர் டத்தோ பிரகதீஸ்குமார் என்பவர் வருடந்தோறும் சொந்த கிராமத்தில் புத்தாண்டை கொண்டாடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி பேரூரைச் சேர்ந்தவர் டத்தோ பிரகதீஸ்குமார். இவர், மலேசியா சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, துபாய், ஹாங்காங், தென்ஆப்ரிக்கா, ஸ்ரீலங்கா உட்பட பத்திற்கும் மேற்பட்ட நாடுகளில் ப்ளஸ்மேக்ஸ் எனும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில், தொழில் நிமித்தமாக அவர் வருடம் முழுவதும் வெளிநாட்டில் இருந்தாலும் புத்தாண்டு மற்றம் பொங்கல் பண்டிகையை அவரது…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.