“15-க்கும் மேற்பட்ட போலி திருமணங்கள்; லட்சக்கணக்கில் பண மோசடி!” – இளம்பெண் மீது `பகீர்’ புகார்
ராமநாதபுரம் மாவட்டத்தில் வனச்சரக அலுவலராக பணியாற்றிவருபவர் மோகன் என்கிற முகமது (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). இவர் சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம். கடந்த 2020-ம் ஆண்டு கன்னியாகுமரியில் இவர் பணியாற்றியபோது, முகநூலில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சனா (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) என்ற பெண்ணின் அறிமுகம் கிடைத்துள்ளது. இதையடுத்து முகநூலில் இருவரும் நட்பாக பழகி வந்துள்ளனர். பின்னர் செல்போன் நம்பர்களை பரிமாறிக் கொண்டு வாட்ஸ்அப்பில் பழக்கத்தை தொடர்ந்தனர். அப்போது அந்தப் பெண் மோகனிடம், “நான் உன்னை காதலிக்கிறேன். திருமணம் செய்துகொள்ள…