டேன் டீ நிர்வாகத்தை மூடுவதா? போராட்டத்தில் ஈடுபட முயன்ற இரு அதிமுக எம்எல்ஏக்கள் கைது!
வால்பாறையில் டேன் டீ நிர்வாகத்தை மூடும் உத்தரவை அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட இரு அதிமுக எல்எல்ஏக்கள் உட்பட் 100-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகம் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் சின்கோனா, பெரியகல்லார். சின்னக்கல்லார். ரயான் விஷன். உபாசி போன்ற எஸ்டேட் பகுதிகள் உள்ளன. இதில் சுமார் 600-க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் தற்போது வேலை செய்து வருகிறார்கள். இந்நிலையில், கடந்த மாதம் வால்பாறை,…