ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி! – போலீஸார் சுதாரித்ததால் தடுத்து நிறுத்தம்
விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல் அருகே உள்ள பள்ளப்பட்டியைச் சேர்ந்தவர் மீனா. இவர் தன் தங்கை, குழந்தைகளுடன் அப்பகுதியில் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகிறார். இவர் குடியிருக்கும் வீட்டிற்கு அருகே உள்ள சர்வே நிலத்தில் வசிக்கும் காளிராஜன், பாண்டியராஜ், சிவக்குமார், காளிராஜ், குருவையா மற்றும் சுப்பையா உள்ளிட்டோர் நடைபாதையை பயன்படுத்தவிடாமல் மீனா குடும்பத்தினருடன் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர், சிவகாசி தாசில்தார் அலுவலகம் மற்றும் காவல் நிலையங்களில் புகார் அளித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை…