கேரளாவில் பாம்பை விட்டு கடிக்கச்செய்து மனைவி கொலை – கணவனுக்கு ஆயுள் தண்டனை
கேரளாவில் மனைவிமீது பாம்பை கடிக்கச்செய்து கொலைசெய்த வழக்கில் கணவன் சூரஜ்க்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த உத்ரா என்பவருக்கும், பத்தினம்திட்டாவைச் சேர்ந்த வங்கி அதிகாரியான சூரஜ் என்பவருக்கும் கடந்த 2018ஆம் ஆண்டு திருமணமாகி ஒரு குழந்தை இருக்கிறது. அரூர் பகுதியில் இரண்டாவது மாடியிலுள்ள ஒரு வீட்டில் வசித்துவந்திருக்கின்றனர். கடந்த ஆண்டு ஒருமுறை உத்ராவை பாம்பு கடித்திருக்கிறது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர் காப்பாற்றப்பட்டிருக்கிறார். மீண்டும் இந்த ஆண்டு மே மாதத்தில் உத்ராவை கருநாகபாம்பு கடித்ததில்…