”திமுக அரசாவது சுவாதியை கொன்னது யாருன்னு கண்டுப்பிடிக்கணும்” : ராம்குமார் அப்பா பேட்டி
தமிழகத்தையே பரபரப்பாக்கிய சுவாதி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமாரின் சிறை மரணம் நடந்து 5 ஆண்டுகள் ஆகின்றன. “மின் கம்பியை கடித்து தற்கொலை செய்துகொண்டான் ராம்குமார்” என்று சிறைத்துறை அறிவித்தாலும் ராம்குமாரின் மரணத்தில் பலத்த சந்தேகங்கள் இருப்பதாக கருத்துக்கள் பலரால் முன்வைக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில், “ராம்குமார் மின்வயரைக் கடித்து தற்கொலை செய்துகொள்ளவில்லை” என்று மனித உரிமை ஆணையத்தில் ஆஜரான அரசு மருத்துவர்கள் கொடுத்த வாக்குமூலம், பரபரப்பையும் சர்ர்சையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ராம்குமாரின் அப்பா பரமசிவனிடம் இதுகுறித்து…