Banner

தமிழகத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ. 25 உயர்வு

இந்தியா முழுவதும் படிப்படியாக உயர்ந்துவந்த பெட்ரோல் டீசல் விலை சென்னையில் இன்று சற்று குறைந்துள்ள நிலையில், வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ. 25 அதிகரித்துள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 12 காசுகள் குறைந்து ரூ. 99.08-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் டீசல் விலை 14 காசுகள் குறைந்து ரூ. 93.38-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ. 25 உயர்ந்து 900.50-க்கு விற்கப்படுகிறது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Read More
Banner

புதிய தலைமுறை எதிரொலி: மலையூர் கிராமத்திற்கு தார்சாலை அமைக்கப்படும் என ஆட்சியர் உறுதி

புதிய தலைமுறை செய்தி எதிரொலியாக திண்டுக்கல் மாவட்டம், மலையூர் கிராமத்துக்கு சாலை வசதி செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் தெரிவித்துள்ளார். மலையூர் கிராமத்தில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என்பது குறித்து புதிய தலைமுறையில் விரிவான செய்தி ஒளிபரப்பானது. இதனையடுத்து திண்டுக்கல் ஆட்சியர் விசாகன் உத்தரவின் பேரில் கூடுதல் ஆட்சியர் தினேஷ் குமார் தலைமையில் வருவாய், வன மற்றும் காவல் துறையினர் 2 ஆயிரத்து 500 அடி உயரத்தில் அமைந்துள்ள…

Read More
Banner

கால நிலை மாற்றத்தால் ஜிடிபி பாதிக்கக் கூடும்: கனிமொழி எம்பி

காலநிலை மாற்றத்தால் நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தி பாதிக்கக் கூடும் என்பதால், மத்திய அரசு தனி கவனம் செலுத்த வேண்டும் என திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி வலியுறுத்தி உள்ளார். காலநிலை மாற்றங்கள் தொடர்பான பன்னாட்டு குழுவின் அறிக்கை குறித்த விவாதம் பூவுலகின் நண்பர்கள் சார்பில் சென்னை பெரியமேட்டில் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி. கனிமொழி, விசிக தலைவர் திருமாவளவன், மனித நேயமக்கள் கட்சியின் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்….

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.