வனத் திருவிழா: 4 மாவட்டங்களில் 20,000 மரக்கன்றுகள் நடப்பட்டதாக ஈஷா தகவல்
தேசிய அளவில் கொண்டாடப்படும் ‘வனத் திருவிழா’வை முன்னிட்டு ‘காவேரி கூக்குரல்’ இயக்கம் மூலமாக கோவை, திருப்பூர், நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய 4 மாவட்டங்களில் சுமார் 20,000 மரக்கன்றுகளை விவசாயிகள் தங்கள் நிலங்களில் நடவு செய்தனர் என்று ஈஷா அறக்கட்டளை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், “இந்தியா முழுவதும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மக்களிடம் மரம் வளர்க்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாகவும் ஆண்டுதோறும் ஜூலை முதல் வாரம் ‘வனத் திருவிழா’ கொண்டாடப்படுகிறது. இதை…