கைக்குள் உலகை அடக்கும் சமூக ஊடகங்கள்: எச்சரிக்கையாக இல்லாவிட்டால் காத்திருக்கும் ஆபத்துகள்
கிட்டத்தட்ட இரண்டு, மூன்று தசாப்தங்களுக்கு மனதை பின்னோக்கி செலுத்துங்கள். அப்போதெல்லாம் எப்போதாவது ஒருமுறை தொலைபேசியில் அழைத்தால் மட்டுமே அல்லது நேரில் வந்தால் மட்டுமே உறவுக்காரர்கள், நண்பர்களை பார்த்துக்கொள்வதும், பேசிக்கொள்வதுமாக இருந்தோம். அடுத்தமுறை அவர்களை பார்க்கும்வரை அதுபற்றியே பேசி மகிழ்ந்துகொண்டிருப்போம். ஆனால், அதுவே இப்போது? நினைத்தால் அடுத்த நொடியிலேயே உலகின் எந்த மூலையில் இருப்பவர்களையும் தொடர்புகொண்டு பார்க்கிறோம், பேசுகிறோம். நம் கையிலிருக்கும் செல்போனும், சமூக ஊடகங்களும்தான் அதற்கு காரணம். கடந்த சில வருடங்களில் ட்விட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ்-ஆப், இன்ஸ்டாகிராம்…