”பிற கட்சிகளில் இருந்து எனக்கு அழைப்புவருகிறது”- சீட் கிடைக்காத அதிமுக எம்எல்ஏ கீதா பேச்சு
‘மற்ற கட்சிகளில் இருந்து எனக்கு அழைப்பு வந்து கொண்டிருக்கிறது. இன்னும் இரண்டு நாட்களில் எனது முடிவை அறிவிப்பேன்’ என கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் கீதா தெரிவித்தார். கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏவாக இருப்பவர் கீதா. இவருக்கு இந்த முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதையடுத்து அவர் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “தமிழக முதல்வரையும், போக்குவரத்துறை அமைச்சர் எம்ஆர். விஜயபாஸ்கரையும் முழுமையாக நம்பி இருந்தேன். கடைசி நேரத்தில் எனது நம்பிக்கைக்கு…