சட்டப்பேரவையில் சானிடைசர் குடித்து தற்கொலைக்கு முயன்ற ஒடிசா பாஜக எம்எல்ஏ – காரணம் இதுதான்!
ஒடிசா மாநில சட்டப்பேரவையில் சானிடைசர் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவர். தியோகர் தொகுதியின் எம். எல். ஏவுமான சுபாஷ் சந்திரா பனிகிரகி இந்த தற்கொலை முயற்சியை மேற்கொண்டுள்ளார். ஓடிசாவை தற்போது பிஜு ஜனதா தள கட்சி ஆட்சி செய்து வருகிறது. விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு அரசு தீர்வு கொடுக்கவில்லை என சொல்லி இந்த தற்கொலை முயற்சி மேற்கொண்டிருந்தார். நெல் கொள்முதல் விவகாரம் தொடர்பாக அமைச்சர் ரனேந்திர பிரதாப் ஸ்வெயின் அவையில் பதில் அளித்த போது இந்த…