பட்ஜெட் 2021: வீட்டுக்கடனுக்கான வட்டி சலுகை ரூ.3 லட்சமாக உயருமா?
‘அனைவருக்கும் வீடு’ என்னும் திட்டத்துடன் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஏதுவாக வரிச்சலுகைகளும் இருக்க வேண்டும் என வீட்டுக்கடன் வழங்கும் நிறுவனங்கள் கருதுகின்றன. பணவீக்கம் தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், வரிச்சலுகையும் உயர்த்த வேண்டும். வீட்டுக்கடனுக்கு செலுத்தப்படும் வட்டியில் ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வரை வரிச்சலுகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த வரம்பினை ரூ.3 லட்சமாக உயர்த்தலாம். பெரு நகரங்களில் இந்தத் தொகையை மேலும் உயர்த்தும்போது, நகரங்களில் உள்ள விலைக்கு ஏற்ப வரிச்சலுகை இருக்கும்….