”மறக்க மாட்டேன்; இந்தியாவிற்கும், இந்திய மக்களுக்கும் நன்றி” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
இந்தியாவிற்கும் இந்திய மக்களுக்கும் நன்றி என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் கொரோனாவால் பெரும் பாதிப்புக்கு உள்ளான அமெரிக்கா இந்திய அரசிடம் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகளை கேட்டது. இது தொடர்பாக பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ”ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகள் ஏற்றுமதிக்கான தடையை நீக்கக் கோரி இந்தியப் பிரதமரிடம் பேசினேன். மாத்திரை ஏற்றுமதிக்கு இந்தியா அனுமதியளித்தால் அது பாராட்டுக்குரியது என்று தெரிவித்தேன். கேட்டுக்கொண்ட பின்பும், மாத்திரைகளை ஏற்றுமதி செய்ய இந்திய அரசு முன்வராவிட்டால், பரவாயில்லை. ஆனால், எதிர்காலத்தில் பதிலடி…