‘வெளிநாடுகளிலிருந்து திரும்பிய 516 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்’: தூத்துக்குடி ஆட்சியர்
வெளிநாடுகளிலிருந்து திரும்பிய 516 பேர் தனிமைப்படுத்திக் கண்காணிக்கப்பட்டு வருவதாகத் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி கூறியுள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் நேற்று பேசுகையில் தமிழகத்தில் 144 தடை உத்தரவு நாளை மாலை முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதன்படி இன்று மாலை 6 மணி முதல் ஏப்ரல் ஒன்றாம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு நடைமுறைக்கு வந்துள்ளது. இந்நிலையில், இன்று மாலை தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர்…