கண்ணாமூச்சி ஆட கண்டெயினருக்குள் புகுந்த வங்கதேச சிறுவனுக்கு நேர்ந்த சோகம்!
குழந்தைகளெல்லாம் ஒன்றுகூடி விளையாடிக் கொண்டிருந்தாலும் பெற்றோர்கள் மற்றும் வீட்டில் உள்ளவர்களின் கண்கள் எப்போதும் அவர்கள் மீது இருக்கும். விளையாடிக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக அவர்களுக்கு எதுவும் நடந்துவிடக் கூடாது என்பதில் பெரியவர்கள் மிக மிக கவனமாக இருப்பர். இந்த கவனம் குறிப்பாக கண்ணாமூச்சி விளையாடும் குழந்தைகள் மீது மிக அதிகமாகவே இருக்கும். இதுபோன்ற காரணங்களினால், குறிப்பிட்ட எல்லைக்குள்ளேயே விளையாடும்படி குழந்தைகளை பெரியோர்கள் பணிப்பது வாடிக்கை. ஆனால் என்னதான் கண்கொத்தி பாம்பாக கவனித்து வந்தாலும், சமயங்களில் விளையாடிக்…