இலங்கை: இரவில் டார்ச்சை ஒளிரச் செய்து கிளர்ச்சி போராட்டம் – பிரதமர் வீடு முற்றுகை
இலங்கையில் ராஜபக்ச அரசு பதவி விலக வலியுறுத்தி, காவல்துறையினரின் தடைகளைத் தாண்டி பல்கலைக்கழக மாணவர்கள் பிரதமர் மகிந்த ராஜபக்ச வீட்டை முற்றுகையிட்டனர். இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று ராஜபக்ச அரசு பதவி விலகக்கோரி போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. தலைநகர் கொழும்புவில் அதிபர் அலுவலகத்தை நோக்கிச் சென்ற பல்கலைக்கழக மாணவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். ஆனால் தடைகளை மீறி பிரதமர் வீட்டு முன்பு கூடிய மாணவர்கள், அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதனைத்தொடர்ந்து பேரணியாக…