தினசரி பயனர்கள் – 3 ஆண்டுகளாக தவறாக கணக்கு காட்டிய ட்விட்டர்!
ட்விட்டர் சமூக வலைதள நிறுவனமானது தனது தினசரி பயனர்களின் எண்ணிக்கையை கடந்த மூன்றாண்டுகளாக தவறாக கணக்கிட்டு உயர்த்தி காட்டியிருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து ட்விட்டர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ட்விட்டர் பயனர்களின் வசதிக்காக கடந்த 2019-ம் ஆண்டு கணக்குகளை இணைக்கும் நடைமுறை (linked accounts) அறிமுகப்படுத்தப்பட்டது. அடுத்தவர்களின் கணக்குகளை சென்று பார்ப்பதில் உள்ள சிரமத்தை குறைக்கும் வகையில் இந்த முறை கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், தினசரி பயனர்களின் எண்ணிக்கையை கணக்கிடும் போது, இந்த இணைப்புக் கணக்குகளையும் தனித்தனி பயனர்களாக…