26வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்… கைகோத்த மருத்துவர்கள், செவிலியர்கள்!
டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பஞ்சாபைச் சேர்ந்த மருத்துவர்களும், செவிலியர்களும் களமிறங்கியுள்ளனர் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறக் கோரிக்கை விடுத்து டெல்லி எல்லை சிங்குவில் இன்று 26வது நாளாக பஞ்சாப், ஹரியானாவைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பஞ்சாபை சேர்ந்த மருத்துவர்களும், செவிலியர்களும் போராட்டக் களத்திற்கு வந்துள்ளனர். இன்றிலிருந்து உண்ணாவிரத தொடர் சங்கிலி போராட்டத்தைத் தொடங்கவுள்ள விவசாயிகளுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்யப்போவதாக அவர்கள் கூறியிருக்கின்றனர். இதுவரை…