ஆன்லைனில் டவல் வாங்க முயன்று ரூ.8 லட்சத்தை இழந்த பெண்!- நூதன முறையில் நடந்த மோசடி
ஆன்லைன் ஷாப்பிங்கில் 6 டவல்களை வாங்க முயன்ற மூதாட்டி ஒருவரிடம் இருந்து நூதனமாக ரூபாய் 8 லட்சத்திற்கும் மேல் மோசடி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை பகுதியை சேர்ந்த 70 வயது பெண் மூதாட்டி ஒருவர், ஆன்லைன் ஷாப்பிங்கில் ரூ.1,169-க்கு பொருட்களை வாங்கிய நிலையில், அவருடைய அக்கவுண்டில் இருந்து ரூ.19,005 பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. அதனை வங்கிக்கும், காவல்துறைக்கும் தெரிவிக்க முயன்ற அவரிடமிருந்து மொத்தமாய் 8 லட்சத்திற்கும் அதிகமாய் பண மோசடி நடந்துள்ளது தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….